இளம் படைப்பாளர்களுக்கான கொடிசியா இலக்கிய விருதுகள் 2021

  இளம் படைப்பாளர்களுக்கான கொடிசியா இலக்கிய விருதுகள் 2021


கொடிசியா மற்றும் பபாசி இணைந்து கோவையில் தொடாந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2021ம் ஆண்டு ஜுலை 17 முதல் 25 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்புத்தகத் திருவிழாவில் 40 வயதிற்குட்பட்ட இளம் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. கீழ்க்கண்ட மூன்று பகுப்புகளில் 01.04.2019 முதல் 31.03.2021 வரை வெளிவந்த அச்சுப் புத்தகங்கள் பரிசீலனைக்கு தகுதியுள்ளவை.


* கவிதை * புனைவு *  புனைவு சாராதவை 


குறிப்பு : 

1.படைப்பாளர்களின் வயது 01.01.2021 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 2. படைப்புகளின் இரண்டு படிகளும், தன் விவரக் குறிப்பும், பிறப்பு சான்றின் நகலும் இணைக்க வேண்டும்.

3. தங்களது படைப்பு தங்களாலேயே எழுதப்பட்டது என்பதற்குண்டான "சுய அறிவிப்பை" இத்துடன் இணைக்க வேண்டும்.

4. பரிசு பெறும் நூல்கள் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும்.

5. கவிதையை தவிர மற்ற நூல்கள் 100 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

6. பரிசு பெறும் படைப்பாளிகளுடன் வாசகர் சந்திப்பு நடைபெறும்.


ஒவ்வொரு பகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ரூ.25,000/- ரொக்கப்பரிசும், பட்டயமும் வழங்கப்படும்.

கீழ்க்கண்ட முகவரிக்கு படைப்புகள் 

வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.04.2021


தலைவர்,

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2021

கொடிசியா ஜி.டி. நாயுடு டவர்ஸ்,

ஹூசூர் சாலை,

கோவை 641 018

தொலைபேசி : 0422 222 2396 அலைபேசி +91 75027 22000

மின்னஞ்சல் : cbf@codissia.com


~ ~ ~

யாழன் ஆதி எழுதிய "ஒளியிருள்" கவிதைத் தொகுப்பு வாங்க !

கருத்துரையிடுக

0 கருத்துகள்