அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2026


அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2026


எழுத்தாளர் இராய செல்லப்பா குடும்பத்தினர் மூன்றாவது ஆண்டாக நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டி.


இந்த 2026 -ஆம் ஆண்டும்  35 எழுத்தாளர்களுக்கு பரிசுகள் உண்டு.


மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 1 இலட்சம் +++ 


2026 -ஆம்  ஆண்டுக்கான போட்டியின் விவரம்:


இருவருக்கு “முத்திரைக் கதை” பரிசு தலா ரூ.6000. (விவரம் கீழே). மொத்தத் தொகை ரூபாய் 12,000


முதல் பரிசு: மொத்தம் ரூ.50,000 (10 பேருக்கு தலா ரூ. 5000)


இரண்டாம் பரிசு: மொத்தம் ரூ.20,000 ( 10 பேருக்கு தலா ரூ. 2000)


மூன்றாம் பரிசு: மொத்தம் ரூ.15,000 (15 பேருக்கு தலா ரூ.1000)


தவிர, இரண்டாம், மூன்றாம் பரிசு பெறுபவர் வயது 31க்குக் கீழிருந்தால், ரூ.500 ‘இளமை போனஸ்’ வழங்கப்படும்.  


கதைகள்  வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 15 மே, 2026.  


போட்டியின் முடிவு  ஜூன் 30-க்குள் வெளியாகும்.    


 ***


சென்ற இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா சென்னையில் சிறப்பாக நடத்தப்படும். எழுத்தாளர்கள் உரிய மரியாதையுடன் கௌரவிக்கப்படுவார்கள். பரிசுத்தொகை, விழா நாளன்று காலை 6-8 மணி அளவில் பரிசு பெற்றவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பரிசுபெறும் 35 கதைகளும் ஒரே தொகுப்பாக வெளியாகும்.


இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் புதுமைகள்:


1. பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் (வழக்கம் போலவே) சிறுகதைத் தொகுப்பின் மூன்று பிரதிகள் தரப்படும். மேற்கொண்டு பிரதிகள் வேண்டுவோர் பரிசுப்பட்டியல் வெளியான உடனே எம்மிடம் முன்பதிவு செய்யவேண்டும்.


2. ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பவேண்டும்.  கதை வந்துசேர்ந்த 15 நாட்களுக்குள், அது முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வுபெற்றதா இல்லையா என்ற தகவல் தெரிவிக்கப்படும். இதனால், தேர்வு பெறாத கதைகளை  வேறு போட்டிகளுக்கோ இதழ்களுக்கோ அனுப்பிப் பயன்பெறலாம்.


3. முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வு பெறாதவர்களுக்கு (மட்டும்) ஓர் அன்புச் சலுகை: உடனே நீங்கள் இன்னொரு கதையை அனுப்பிப் போட்டியில் பங்குபெறலாம்.


4. இரண்டாம் கட்டப் பரிசீலனைக்கு சுமார் 80 முதல் 100  கதைகள் எடுக்கப்படலாம். இவற்றில் நடுவர் முடிவுப்படி 35 பேர்கள் பரிசு பெறுவர். மீதமுள்ள பரிசு பெறாதவர்களுக்கு, தமிழகப் பரிசுப்போட்டிகளின் வரலாற்றிலேயே முதல்முறையாக, பரிசுக்கதைகளின் தொகுப்பு நூலின் ஒரு பிரதி எமது செலவில் அன்பளிப்பாக வழங்கப்படும்.


விதிமுறைகள்:


1. உலகில் எங்கிருந்தும் தமிழர்கள் வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம்.


2. கதைக்கருவைப் பொறுத்து சிறுகதையின்  நீளம் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 2000-க்கு மேற்படாமலும் இருக்கலாம்.


3. சரித்திரக் கதைகள் வேண்டாம்; புராணக் கதைகள் வேண்டாம். நகைச்சுவைக் கதைகள் வேண்டாம். ஆங்கிலச் சொற்கள் அதிகம் வேண்டாம். வெளியூர்க்காரர்களுக்குத் தெரியாத கிராமீயச் சொற்கள் அதிகம் வேண்டாம். (ஒருவேளை பயன்படுத்தினால் அவற்றின் பொருளை ஆங்காங்கே அடைப்புக்குறியில் எழுதிவிடுங்கள்). 


4. கதையின் முதல் இரண்டு பக்கங்களில் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு வரியும் அடுத்த வரியைப் படிக்கத் தூண்ட வேண்டும். அத்தகைய சுவாரஸ்யம் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும்.


5. கால்புள்ளி (comma), முழுப்புள்ளி (fullstop),  உரையாடல்களுக்கான மேற்கோள்குறி (quotation marks) ஆகிய மூன்று நிறுத்தற்குறிகளும் தேவையான இடங்களில் கட்டாயம் இடம்பெறவேண்டும். (ஒற்றுப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். இது கணினி யுகம்!)


6. போட்டிக்கு வரும் எல்லாக் கதைகளையும் முதலில் இராய செல்லப்பா கவனமாகப் படித்து மதிப்பெண் இடுவார். இது முதல்கட்டம். அதிக மதிப்பெண் பெற்ற முதல் 80-100 கதைகள் இரண்டாம் கட்டத்திற்கு அனுப்பப்படும். அவற்றிலிருந்து பரிசுக்குரிய கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.


7.  புதிய எழுத்தாளர்கள் மட்டுமின்றி, சென்ற 2024, 2025 ஆண்டுகளில் எம்மிடம் இரண்டாம் பரிசும் மூன்றாம் பரிசும் பெற்றவர்களும்  இந்த ஆண்டும் கலந்துகொள்ளலாம். 


8.  சென்ற 2024, 2025 ஆண்டுகளில் முதல் பரிசு பெற்றவர்களும் விரும்பினால் கலந்துகொள்ளலாம். அவர்களில் இருவரின் கதைகள் (மட்டும்!) “முத்திரைக் கதைகள்” என்று தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.6000 பரிசாக வழங்கப்படும்.

** 


9. MS Word வடிவில், உங்களுக்குப் பிடித்த UNICODE FONT இல், கதையை எழுதி, அந்த FILE ஐ கீழ்க்கண்ட மின்னஞ்சலில் ATTACH செய்து அனுப்பவேண்டும்.  [email protected]  (Pdf வேண்டாம்)


10. முக்கியம்: எழுத்தாளர்களின் இயற்பெயர், (புனைபெயர் இருப்பின் அதுவும்), பாலினம், வயது (கட்டாயம்), அஞ்சல் முகவரி, மின்னஞ்சல், அலைபேசி எண் மற்றும் கீழ்க்கண்ட உறுதிமொழியை இணைத்து அனுப்பவும்: 


உறுதிமொழி


1. இந்தச் சிறுகதை எனது சொந்தப் படைப்பாகும். வேறொன்றின் தழுவலோ, மொழிபெயர்ப்போ, சுருக்கமோ அன்று.


2.  இதுவரை இக்கதை எந்த ஒரு அச்சிதழிலோ, இணைய தளத்திலோ, ஆடியோ-வீடியோ-அல்லது டிஜிட்டல் வடிவில் வெளியாகவில்லை என்றும், இந்தப் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் வரையில், இக்கதையை வேறெந்த அச்சிதழுக்கோ, இணைய தளத்திற்கோ (ஆடியோ, வீடியோ, டிஜிட்டல்) அனுப்பமாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன்.


சென்ற ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் எழுத்தாள நண்பர்கள் அதிக அளவில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 


மேற்கொண்டு விவரங்கள் தேவைப்பட்டால்  எழுத்தாளர் இராய செல்லப்பா அவர்களை மெயில் ஐடியில் அணுகவும்: [email protected]

கருத்துரையிடுக

0 கருத்துகள்