சத்தக்காரன்

 

 



                                சத்தக்காரன்

 

 

பெயர்:

தரையில் வாழும் உயிரினங்கள் போல வலையில் அகப்பட்டவுடன்  சத்தமிடுவதால் இந்த மீனை சத்தக்காரன் என்று அழைக்கிறார்கள்.இவ்வகை மீன்களை மீனவர்கள் சமைத்து சாப்பிடமாட்டார்கள்.வலையில் பிடிப்பட்டாலும் கடலிலேயே விட்டுவிடுவார்கள்.

இருப்பிடம்:

ஓரா பாசிகளிலும் மற்றும் வட்டார தாழைகளிலும் அதிகமாக காணப்படும். சிறுசிறு பள்ளங்கள் தோண்டி படுத்துக்கொள்ளும். ஆழக்கடலிலும் கரைப்பகுதிகளிலும் பரவலாக வாழும் தன்மையுடையது.தண்ணீருக்குள் தரைப்பகுதியில் படுத்தே இருப்பதால் அரிவலையில் அதிகமாக பிடிப்படும்.

 

இரை மற்றும் இனப்பெருக்கம் :

பெரும்பாலும் சின்னச் சின்ன பூச்சிகளையும், கூனி இறாலையும் (குஞ்சு இறால்) இரையாக்கிக்கொள்ளும். முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன சத்தக்காரன் மீன்கள்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்