தேநீர் பதிப்பகம் நடத்தும் குறுங்கதைப் போட்டி



தேநீர் பதிப்பகம் நடத்தும் குறுங்கதைப் போட்டி

பரிசு-2500 (ஐந்து கதைகளுக்கு தலா 500)
குறுங்கதைப் போட்டிக்கான விதிமுறைகள்
(நண்பர்களின் வேண்டுகோளுக்காக மாற்றப்பட்டது).

* சொந்தக் கற்பனையாக இருக்கக் கூடாது. (சொந்த அனுபவமாக இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையில் நடந்த, வாழ்வைப் புரட்டிப் போட்ட ஏதேனும் ஒரு மறக்க முடியாத சம்பவத்தை எழுதி அனுப்புங்கள். காதல்
பிரச்சனை, கரண்ட் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சினை, கோழி சண்டை, நாய்ச் சண்டை, சொத்து தகராறு, கொடுக்கல்  வாங்கல்தகராறு. வேண்டுமானாலும் இருக்கலாம், கட்டுரையாகவோ, செய்தியாகவோ இல்லாமல் கதையைப் போலவே சுவையாக அமைய வேண்டும்.

* வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
தட்டச்சோ, கணிணி அச்சோ நிச்சயம் ஏற்க முடியாது. கையெழுத்தில்
எழுதியது மட்டுமே ஏற்கப் படும். எழுதிய கதையை போட்டோ எடுத்தோ,
ஸ்கேன் செய்தோ மெயில் அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்.

கதையின் முடிவில் முழு முகவரி, தொடர்பு எண் குறிப்பிடுங்கள்.
மெயில் அனுப்ப வேண்டிய முகவரி-
theneerpathippagam@gmail.com
வாட்ஸ்அப்பில் அனுப்ப- 9080909600

கதைகள் அனுப்ப கடைசி தேதி- ஆகஸ்ட் -15-2020
தேநீர்பதிப்பகம்
24/1, மசூதி பின் தெரு சந்தைக்கோடியூர் ஜோலார்பேட்டை-635851
திருப்பத்தூர் மாவட்டம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்