கவிஞர் ஆத்மாநாம் விருதுகள் 2020



நண்பர்களே,

2020-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதிற்குப்
பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 2017–ஆம் ஆண்டிலிருந்து 2020 ஜனவரி வரை வெளியான கவிதை தொகுப்புகளைப் பரிந்துரைக்கலாம். முதலில் பெரும்பட்டியல் வெளியிடப்பட்டு, அதிலிருந்து குறும்பட்டியல் வெளியிடப்படும்.

விருதுக்கான கவிதைத் தொகுதியை அறக்கட்டளை தேர்ந்தெடுத்து அறிவிக்கும்.அறக்கட்டளையின் முடிவே இறுதியானது.
கவிதை தொகுப்புடன் (3 பிரதிகள்), பரிந்துரைக் கடிதத்தையும் சேர்த்து அனுப்பவும்.கவிதைத் தொகுப்புடன் பரிந்துரைக் கடிதம் அனுப்ப வேண்டிய 

முகவரி:
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
38/22, நான்காவது பிரதான சாலை,
கஸ்தூரிபாய் நகர், அடையாறு, 
சென்னை - 600 020.

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.03.2020

அன்புடன் ,
வேல் கண்ணன்,
கார்த்திகேயன் ராமனுஜம்,
அறங்காவலர்கள்,
கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை,
சென்னை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்