விமர்சனக் கட்டுரைப் போட்டி
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுத்துலகில் முப்பதாண்டுகளை நிறைவு செய்கிறார். அதனைக் கொண்டாடும் விதமாக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அவருடைய படைப்புகள் மீண்டும் பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு இக்கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். முதல் பரிசு ₹.5000. இரண்டாம் பரிசு ₹.3000. மூன்றாம் பரிசு ₹.2000. ஆறுதல் பரிசு தலா ₹.1000 பத்து பேருக்கு.
கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2025.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
1. கீரனூர் ஜாகிர்ராஜாவின் ஏதேனும் ஒரு நூல் அல்லது அவரது படைப்புலகம் பற்றிய கட்டுரை எழுதலாம்.
2. கட்டுரை குறைந்தபட்சம் ஆயிரம் சொற்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
3. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும்.
4. கட்டுரை இதுவரை எந்தவொரு இதழிலும் பொதுவெளியிலும் வெளிவந்திருக்கக்கூடாது.
5. கட்டுரை சொந்த படைப்பாக இருக்க வேண்டும் . இல்லாதபட்சத்தில் கட்டுரை பரிசீலிக்கப்படாது.
6. கட்டுரை யுனிகோட் எழுத்துருவில் Word document ஆக மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. பரிசுக் கட்டுரைகள் தேர்வுக் குழுவினரால் இறுதி செய்யப்படும். தேர்வுக்குழுவின் முடிவு இறுதியானது.
0 கருத்துகள்